கனவுகள் சுமந்து வந்த
மாங்கல்யநாள் இன்று
இருவர் இணைந்து
உறவுகள் பெருகிய நாளின்று
மனமெங்கும் இன்பங்கள் பொங்கி
இதயத்தினில் ஊற்றெடுத்து
உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்தும்
வாழ்த்துகள் குவித்திட
பாலும்,பழமும்
தேனின் சுவையும் போலே
இருவரின் இல்லறவாழ்வும்
இனித்திட வாழ்கவே...
உணர்வுகளை மதித்து
உயிறேன நினைத்து
விட்டு கொடுத்து
உறவுகள் போற்றிட
வாழ்கவே...
ஆலமரம் போலவே
வேரூண்டி விழுதுகள் விட்டு
வம்சம் விருட்சம் பெற்று
வாழ்கவே...
என்றென்றும் பல்லாண்டு காலம்
நலமுடனும் நற்க்குனமுடனும்
நலம் வாழ வாழ்த்துகின்றோம்...!

Aucun commentaire:
Enregistrer un commentaire