mercredi 8 avril 2015

இறந்து போன இதயம்...!


  

கற்ப்பனைகளும்  ஆயிரம்தான் 
கனவுகளும் அதிகம் தான்
கண்டவுடன் ஆச்சரியம் தான் 
எனக்கு...
உன்னை கண்டவுடன் 
ஆச்சரியம் தான்
எனக்கு...
கற்ப்பனைகளும்  கனவுகளும் 
நிஜமாகவே 
நிறைவேறிடும் போது
நடப்பதை எண்ணியே 
மனதெங்கும் ஆச்சரியம் தான்...
என் மனப்புத்தகம் 
படித்துவிட்டுத்தானோ 
உன்னை அனுப்பி வைத்தான் 
இறைவன்  
சந்தேகம் தான் உள்ளுக்குள்ளே…
அட ஆசைப்பட்டதெல்லாம் 
ஒவ்வொன்றாய் நிகழ்ந்திட 
சில சஞ்சடங்கள்,தடங்கல்கள் 
திஷ்ற்றி போலே வந்திட...
மனம் வருந்தும் நேரம்கூட 
உன் அன்பாலே மாற்றிடுவாய்
சோகத்தையும் அழித்து
இன்பத்தை தந்திடுவாய்...
அதிஸ்டம் இல்லாதவள்
என்றெண்ணிய எனை 
உலகத்தை வென்றதை போல் 
மகிழ வைத்தாய் நீ ...
போராடங்கள் வந்தாலும் 
மரணமே வந்தாலும் 
உன்னை விட்டுச்செல்ல மாட்டேன் 
வாக்குகள் பலம் தான்...
நம்பிக்கை வேறூண்டி
விழுதுகள் விட்ட பின்னர் 
யார் முயன்ற போதும் 
அழித்திட முடியவில்லை 
எவராலும்...
உன் மேல் நான் கொண்ட 
நம்பிக்கையை...
வாழ போகும் காலமென்ன 
இனி எடுக்கப்போகும் ஜென்மமும்
உனக்காகத்தான் 
உறுதியாக நான்...
காலம் கனியவில்லை 
நேரம் நகரவில்லை 
யாரும் மசியவில்லை 
இவளோ உனக்கு அதிஷ்டமில்லை...
ஒருபோதும் அழியாது என்னன்பு 
எனக் கூறிவிட்டு 
உனக்குள் அன்பை சுமந்து
நீயெனை விட்டுச்சென்றால் 
மறந்திடுவேன் என்று எண்ணி விட்டாயோ...
காலம் ஓடுகின்றது 
நேரம் மாறுகின்றது 
நாட்களும் மறைகிறது 
உனது நினைவுகளோ மாறது 
என்னை கொள்கின்றது 
இறந்து விட்ட இதயத்தில் 
இடமெங்கே குடுப்பேன் 
இன்னோர் உறவுக்கு 
நிச்சயம் முடியாது...


Aucun commentaire:

Enregistrer un commentaire