சில நாட்கள் சொர்க்கம்
என்னவன் அருகிலே
பூமியே நரகம்
அவன் பிரிவிலே
மீண்டும் வருவான்
பேராசை எனக்குள்ளே
கனவு நான் கண்டேன்
கலைத்தானே நிஜத்திலே
என்னை மறந்தே போனான்
வெகு விரைவிலே
அவன் பாதியாய் ஒருபெண்
சேரத்தானே தன்னுயிரிலே
கண்டதும் அதிர்ந்தேன்
சொட்டியது நீர் விழியிலே
கற்பனை உள்ளம்
கருகியதே இன்னாளே
மறந்திட நினைத்தேன்
எரிகிறது இதயம் தன்னிலே...!

Aucun commentaire:
Enregistrer un commentaire