விளையாட்டு சிறுமியாய்
குருபுகள் பல செய்து
கழித்திட்ட காலங்கள் போக...
பெற்றவர்கள் வார்த்தையில்
திருமண பேச்சொன்று
எனது காதினில் பாய...
குமரியாகிய எண்ணம்
மனதில் தோன்ற...
நண்பர்களின் கேலிகள்
உற்றாரின் கிண்டல்கள்
உறவுகளின் தேடல்கள்
புதிதாய் தோன்றிட...
உதடினில் புன்னகை
தானாக பூத்திட...
கற்பனை கனவுகள்
உற்றாய் பாய்ந்திட...
என் மனமே பேசியது...
யாரவன்...?
உருவம் எதுவோ...?
உணர்சிகள் எப்படியோ...?
அதிகம் கோவம் உள்ளவனோ...?
அன்பை பொலிபவனோ...?
சந்தேகம் உடையவனோ...?
சத்தியம் ஆனவனோ...?
அனைத்து வாழ்வானோ...?
அடிமையாய் வாழ்வேனோ ...?
ஆயிரம் கேள்விகள்
தேனிகளாய் சுற்ற...
அழகான ஒரு மாற்றம்...
அறியாத பயம்...
புரியாத குழப்பம்...
அனைத்திற்கும் பதில்
தேடும் நான்...
காலத்தை நோக்கி
மெதுவாய் நகர்கின்றேன்...

Aucun commentaire:
Enregistrer un commentaire