mercredi 29 juillet 2015

என்னுயிர் நட்பே கூறிடு...!


சோகம் வரும் போதெல்லாம் 
ஆறுதல் தேடி உன்னிடம் வந்தேன் 
மனதில் குழப்பமென 
அமைதி தேடி உன்னை நாடினேன் 
இதயத்தில் வலியென 
மருந்து  தேடி உன்னை அழைத்தேன் 
வாழ்வே கசப்பென
இனிமை தேடி உன்னிடம் பேசினேன் 
எப்போதும் அருகில் இருந்த நீ 
இன்று விலகிச்செல்வது ஏனோ 
என்னுயிர் நட்பே கூறிடு 
நீ அருகிலில்லை என்று அறிந்து 
அனைத்தும் என்னை சூழ்ந்தது இன்று 
தாங்கிட முடியவில்லை என்னால் 
மீண்டும் என்னிடம் வந்துவிடு
உன் நட்பாலே இன்பம் தந்துவிடு...!

Aucun commentaire:

Enregistrer un commentaire