mercredi 5 novembre 2014

அழியாது உனது நினைவுகள்...!


நீ சுவாசிக்கும் மூச்சு எவரானாலும் 
என்னிதயமே நான் வாழ காரணம் நீயே 
தனிமையில்த்தான் தவிக்கின்றேன் 
காரணம் உன் நினைவுகளின் திறமை 
தினம் கண்ணீரே வடிக்கின்றேன்
உயிரே அருகில் நீயில்லா வறுமை 
என்தேகம் மண்ணில் புதைந்தே போனாலும் 
அழியாது உனது நினைவுகள்...!

உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா...!


உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா
என்னை விட்டு ஏன் சென்றாய் என்று 
எங்கே சென்றாய் என்று 
எதற்காக சென்றாய் என்று 
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா
என்னுயிரே திரும்பி வந்துவிடு என்று 
என்னோடு வந்துவிடு என்று 
எனக்காகவே வந்துவிடு என்று 
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா 
என்சோகங்கள் கரைந்துவிடட்டும் என்று 
என்பாவங்கள் அழிந்துவிடட்டும் என்று 
என் சாபங்கள் நீங்கிவிடட்டும் என்று 
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா...!

lundi 27 octobre 2014

மரணித்துவிட்டேன்...!


மரணம் வரை மறவேன் என்று நேசித்த நீ 
மரணித்துவிட்டேன் என்று எண்ணியா 
மறந்தாய் என்னை 
மறந்துவிட்டாய் என்று என்னும்போதுதான் 
மரணம் என்னை அழைக்கின்றது அருகில்...!

mercredi 22 octobre 2014

உன் இதயம்...!



கல்லாக இருக்கும் உன்னிதயத்தை 
அன்பெனும் கயிற்றால் கட்டி 
இழுத்து பார்க்கின்றேன் 
சற்றும் நகராமல் இருக்கின்றது 
உன் இதயம்...!

dimanche 19 octobre 2014

உயிரே என்வலி அறியாயோ நீ...?


எவனோ என்று நினைத்தேன் 
விலகியே நடந்தேன் 
விலகாமல் நீ வந்ததனாலோ
என்னவென்றே அறியேன் 
இதயம் நோருகியத்தை உணர்ந்தேன் 
நீ விலகி செல்வதனாலோ
உயிரே என் வலி அறியாயோ நீ...?

jeudi 16 octobre 2014

நீ தூரம் சென்றதால்...!


என்னை விட்டு விலகி நீ
உன்நினைவுகளை சுமந்து நான்
உன்னை பிடித்ததால் தானோ என்னவோ
என் வாழ்வில் வேறதும் பிடிக்கவில்லை
நீ தூரம் சென்றதால்...!
 

உன்னை மறந்துவிட்டேன் தான்...!


உதடுகள் பொய் சொல்ல கூடும்  
ஆனாலும் என் விழியோரம் 
வழியும் நீர் கூறும் 
என்றும் உன்னையே  தான்
நேசிகின்றேன் என்று...!

mercredi 15 octobre 2014

கன்னத்தில் விழுந்த மழைத்துளி...!



நிலா வெளிச்சத்தில் 
பொழியும் மழை நடுவினிலே 
ஒற்றை குடைக்குள்ளே 
என்னை அணைத்தபடி நீ 
குடையையும் தாண்டி 
கன்னத்தில் விழுந்த மழைத்துளி
துடைத்துக்கொண்டே கண் விழித்தேன்
பின்பு தான் நான் அறிந்தேன்
அது என் கண்ணீரென்று...!

lundi 13 octobre 2014

மிகிழ்ச்சியெடா எனக்கு...!


மீண்டும் நீ என்னோடு பேசியது 
சாதாரணம் ஆகலாம் உனக்கு 
ஏனோ உலகசாதனை படைத்துவிட்ட
மிகிழ்ச்சியெடா எனக்கு...!

dimanche 12 octobre 2014

உதவியில்லை உலகுண்டு...!


பணமில்லை பசியுண்டு 
அறிவில்லை அன்புண்டு 
உறவில்லை உயிருண்டு 
துணிவில்லை துயருண்டு 
உதவியில்லை உலகுண்டு...!


samedi 11 octobre 2014

உன் பிரிவால்...!


வசந்த காலத்து 
வண்ணத்து பூச்சிபோல் 
வலம் வந்த என் காதல் 
இன்று தீயில் உருகும் மெழுகாய் 
உருகியே போகின்றது 
உன் பிரிவால்...!


நம் வாழ்க்கையில்...!


நாம் நேசிக்கும் உறவுகள் 
கண் கலங்கிட கூடாதென்று
எண்ணியே வாழும்பொழுது 
அவர்கள் நம் கண்களில் 
இரத்தம் வடிய வைக்கின்றனர் 
அதுதான் பெரிய வலியாகின்றது
நம் வாழ்க்கையில்...!

jeudi 9 octobre 2014

அவன் குழந்தை பேச்சை கெஞ்சி கேட்டு கேட்க்க தோணும்...!


கொஞ்சி பேசும் அவன் குழந்தை பேச்சை 
கெஞ்சி கேட்டு கேட்க்க தோணும் 
வஞ்சம் இல்லா அவன் மனசில் 
தஞ்சம் கேட்டு வாழ தோணும் 
அச்சம் இல்லா அவன் உயிரில் 
மிச்சம் இல்லா கலந்திட வேணும்...!

காதல் எனக்கு நான் சுவாசிக்கும் மூச்சேடா...!


காதல் உனக்கு விளையாட்டாகலாம்
காலம் சென்றதும் மாற்றி விட்டு போக 
காதல் எனக்கு நான் சுவாசிக்கும் மூச்சேடா 
காலம் முழுதும் என்னோடு தானிருக்கும்...!


vendredi 18 juillet 2014

என்னவனே...!


என்னை தூங்க விடாது 
தொல்லைகள் செய்தாலும் 
உன் நினைவுகளை 
நான் ரசிக்கின்றேன் 
என்னவனே...!

jeudi 26 juin 2014

சிறு துளியால்....!


உன்னை கண்டு கருவான 
என் காதல் 
கல்லறை சென்ற பின்தான் 
செடியானது 
அங்கெ வந்து நீ சிந்திய 
சிறு துளியால்....!

mercredi 18 juin 2014

என்னில் நானில்லை...!


நாம் முத்தங்கள் பரிமாறி கொண்டோமோ 
இல்லை உயிர் மாற்றி கொண்டோமோ 
அன்பே நீ முத்தமிட்ட நாள்முதல் 
என்னில் நானில்லை...!

அழகிய நிமிடங்கள்...!


உன் அருகே நானிருந்த 
அந்த அழகிய நிமிடங்கள் 
கனவாக கழிந்த போதும் 
இன்றும் இனிமையாய் 
தித்திக்கின்றது என்னுள்ளத்தில்...!

dimanche 15 juin 2014

தீமூடி சென்றுவிட்டாய்...!



நீயோ என்னில் 
தீமூடி சென்றுவிட்டாய் 
என் அன்பே 
தீயில் மெழுகாய் உருகுவது 
என்னவோ நான்தானே...!

mercredi 4 juin 2014

என்னுயிரே...!


பாடம் படிக்கவென 
புத்தகம் தூக்கியும் 
நான் படித்தது என்னவோ 
உன் நினைவுகளை தான் 
என்னுயிரே...!

lundi 2 juin 2014

மனம் ஏற்று கொள்வதில்லை...!


தண்டவாளம் போல் 
அருகிருந்தாலும் 
எல்லா உறவும் 
நிச்சையம் ஒருநாள் 
பிரிந்து தான் செல்லும் 
என்பதை ஏனோ 
மனம் ஏற்று கொள்வதில்லை...!

என்னாசைகள் மட்டுமே காய்ந்து போன சருகுகளாய்...!


உன் நினைவுகள் 
என்னிதயத்தில் 
பூடி வைக்கபட்ட 
பொக்கிசமாய்...
என்னாசைகள் மட்டுமே 
காய்ந்து போன 
சருகுகளாய் போய்
கிடக்கின்றதே...!

lundi 21 avril 2014

நீ பேசும் மொழி...!



மழலைகள் மொழிதான் 
அழகென்று 
யார் சொன்னார் 
அழகே....
நீ பேசும் மொழியை 
யாரும் கேட்டதில்லைபோல்...!

எட்டி பிடித்துவிட்டேன்...!


நீ எட்டாத தொலைவில் 
இருந்தாலும் 
எட்டி பிடித்துவிட்டேன் 
என் நட்பாலே 
உன்னை...!

கண்ணெதிரே நீ...!



கண்ணெதிரே நீ 
வரும்போது மட்டுமே 
என்னிதயம் 
சிறகுகள் விரிக்கின்றதே 
அது ஏனோ என் தோழா...?

lundi 17 mars 2014

காதல் வானிலே...!


அன்பே...
ஐம்புலன்களை சாட்ச்சியாக வைத்து
நாம் கோர்த்த கரங்கள் பிரியாது பறந்து திரிவோம் வெண்புறாக்களாய் காதல் வானிலே...!

mercredi 5 mars 2014

என் அம்புலியே...!



எட்டி பிடிக்கும் அருகில் இல்லை 
தொட்டு விட முடியவும் இல்லை 
கண்ணில் தென்பட்ட நீ 
மனதை மட்டும் திருடி விட்டாய் 
தினம் நான் ரசிக்கும் 
என் அம்புலியே...!

கொடிய விஷம்...!


சொட்டு சொட்டாய் 
என்னை கொள்ளும்
உன் நினைவுகளும் 
கொடிய விஷம் தான் 
என்பதை நீயும் அறிவாயா...?

உன் நினைவுகள்...!


வீசும் காற்றில் கூட 
தேன் துளிச்சாரல்கள்
உன் நினைவுகள் 
மனதினை நனைக்கும் 
பொழுதினில்...!

mardi 4 mars 2014

உலகில் கெட்டவள் நானானேன்...!


சொல்ல முடியாத சோகங்கள் 
ஆயிரம் எனக்குள்ளே 
வலிகள் தாங்காது எனது விழிகளில்
பொங்கி வரும் கண்ணீர் கண்டு 
துடைத்திட கை ஒன்றும் நீளவில்லை 
முட்டை கண்ணீறேன்று கூறிட 
பல வாய்கள் மட்டும் நீண்டது 
வேஷம் போடும் உலகம் வேண்டாம் என்று 
விட்டு சென்றிடவும் முடியாத கோழை நான்  
அதனால் தான் என்னவோ 
எனது வாயும் கூட நீண்டு போகிறது 
சில நேரங்களில் 
அதனாலே உலகில் கெட்டவள் நானானேன்...!

வாழ்க்கை பாதை முழுதும் முட்கள்...!


                                                                 என் வாழ்க்கை
                                                                 பாதை முழுதும் 
                                                             முட்க்களை போட்டு
                                                                 மரணத்தையும் 
                                                           தொலைவில் வைத்து 
                                                           அனுப்பி வைக்கிறான் 
                                                                  இறைவன்...!

lundi 3 mars 2014

அணைவருமே வெறுக்கின்றனர்...!


என்ன பாவம் 
செய்தேனோ 
இறைவா...?
உன்னில் இருந்து  
இஜமன் வரை 
அணைவருமே 
வெறுக்கின்றனர்...!

dimanche 2 mars 2014

உணர்வற்ற ஜடமாய் நான் ஆனேன்...!




உறவுகளே உயர்ந்ததென்று 
உணர்வுகளையே தீயிட்டவள்  
உறவுகளின் வேஷம் கலைய
உணர்வற்ற ஜடமாய் 
நான் ஆனேன்...!

என்னை கருவறை அனுப்பி வைத்தாய்...!


இவ்வுகளில் 
ஏமாற்றத்தை மட்டுமே 
பெற்றிடு என்றா 
என்னை கருவறை 
அனுப்பி வைத்தாய் 
இறைவா...?

vendredi 28 février 2014

நினைவிலும் கனவிலும் தொல்லை தருகின்றாய்...!



                                                    விலகி செல்கிறேன் என்று கூறி 
                                                            விலகி சென்றவன் நீ 
                                                    ஏனோ நினைவிலும் கனவிலும் 
                                                       தொல்லை தருகின்றாய் 
                                                             தினம் தினம்...!

jeudi 27 février 2014

உன் நினைவுகளையும் பூட்டிவிடேன்...!



உன்னை நேசித்த என்னிதயத்தை 
நீ பூட்டிவிடச்சொன்னாய்
நானும் பூட்டிவிடேன் 
உன் நினைவுகளையும் 
உள்ளே வைத்து...!

முடியவில்லை பேசிட...!


பேச துடிக்கும் என் இதயத்தையும் 
கட்டி போட்டுவிட்டான் என்னவன் 
கூறியது என்னுயிரானவன் 
என்பதனாலோ தெரியவில்லை 
முடியவில்லை பேசிட 

mercredi 26 février 2014

என் விழிகள் சிவந்தது...!


என் முகம் சிவந்தது 
அவன் முகம் பார்த்த நாளில் 
என் விழிகள் சிவந்தது 
அவன் விழி காணாத நாளில்...!

samedi 8 février 2014

மௌனிக்கின்றேன்...!


நீ என்னை விட்டு விலகும்போதே
என் வார்த்தைகளையும் கில்லிச்சென்றாயோ
நான் பேசுவதற்கும் வார்த்தைகளின்றி 
மௌனிக்கின்றேன்...!

ஏனோ மனம் கேட்பதில்லை...!


விடைபெறுகிறேன் என்று 
உதடுகள் கூறினாலும் 
ஏனோ மனம் கேட்பதில்லை 
தனக்கு பிடித்தவரை 
விட்டுச்செல்ல 
மறைந்திருந்தே 
நிழலாக தொடர்கிறது 
நித்தம் நித்தம் 
தொந்தரவின்றி...!

mercredi 5 février 2014

மனம் வருந்தி...!


நீ வணங்கும் 
இயற்க்கை தாயிடமே 
கேட்கின்றேன் 
உன்னை எனக்கு 
தந்திட சொல்லி 
மனம் வருந்தி...!

என்னுயிரையெ தருகிறேன்...!


என்னை தனிமையில் விட்டு 
நீ விலகி செல்வது 
தீயில் போட்டு எரிப்பது 
பேலே தான் அன்பே 
வலிக்கிறது 
முடிந்தால் மீண்டும் வந்துவிடு 
என்னுயிரையெ தருகிறேன்...!

lundi 3 février 2014

உனக்காக...!


நீ பேசிய வார்த்தைகளை 
ஆயிரம் முறை 
உச்சரிக்கின்றேன் 
நீ பேசாத நொடிகளில்...! 

இவ்வுலகில் 
எத்தனையோ
ஆண்கள் இருந்தும்
ஏனோ
உன்னை மட்டுமே
பிடிக்கின்றது
என்னிதயத்திட்க்கு...!

எத்தனையோ
கவி படித்தாலும்
என்னிதயம்
உன் பெயரினையே
ரசிக்கின்றது...!

உன்னை பார்த்தபின்தான்
எனக்குள்ளும் இதயம்
இருப்பதாய் உணர்கிறேன்...!

நீ பேசாத நொடியில்...!


நீ பேசாத நொடியில் 
கடிகாரத்தை 
ஆயிரம் முறை 
பார்த்திருப்பேன் 
அந்த நிமிடம்  
அப்படியே 
நின்றுவிட்டதோ 
என்ற எண்ணத்திலே...!

vendredi 31 janvier 2014

கோடி நன்றிகள்...!

நாம் எதிர் பார்த்து காத்திருப்பது
எதிர் பாராத நேரங்களில் 
நிகழ்ந்திடும்போது
எத்தனை இன்பங்கள் 
மனதிலே துள்ளி குதிக்கின்றது
அதற்க்கு காரணமான
உள்ளங்களிட்கு 
கோடி நன்றிகள்...!

jeudi 30 janvier 2014

தயவு செய்து மன்னியுங்கள்...!


அறிந்தோ அறியாமலோ 
நாம் தவறு செய்து விடுகின்றோம் 
அதை எண்ணி மனம் வருந்தி
மன்னிப்பு கேட்டும் கிடைக்கவில்லை 
என்பதே மிக பெரிய தண்டனை 
முடிந்தால் மன்னியுங்கள்...

mardi 28 janvier 2014

எட்டி பார்கிறேன்....!


என் தாயின் அன்பை 
நீ தந்திடும் போது
இவ்வுலகையே 
மறந்து போகின்றேன் 
உன் கையில் நான் 
சேயாகும் போது 
சொர்க்கத்தையே
எட்டி பார்கிறேன்....

lundi 27 janvier 2014

திருட்டு...!


உன் விழிகளிட்க்கும் கூட 
கற்றுக்கொடுத்தாயோ
திருடிக்கொள்ள
யாருக்குமே தெரியாமலே 
திருடிவிட்டது 
எனது இதயத்தை...!

நல்ல நடிகன்...!


இவ்வுலகிலே 
நீ ஒருவனே 
நல்லவன் 
என்றெண்ணினேன் 
நீ ஒருவனே 
நல்ல நடிகன் 
என்பதை 
நிரூபித்துவிட்டாய் 
நீ...! 

dimanche 26 janvier 2014

ஏக்கத்தோடு நான்...!


உன் அன்பை தேடி ஓடுகிறேன் 
இருண்டு கிடக்கும் உன் மனதிலே 
நியத்தை தேடி அலைகிறேன் 
நீ பூட்டி வைத்த உன் இதயத்திலே 
விடிந்திடுமா என் வாழ்வும் 
ஏக்கத்தோடு நான்...!