samedi 14 novembre 2015

உலகமே நீயென்று சுற்றியே வந்திடுவேன்...!


காற்றிலே ஒருசேதி அனுப்பி வைத்தேனே 
உயிரே உன்னிடம் வந்து சேர்ந்ததோ 
உறவாய் வந்தவனே  உணர்ந்தாயோ 
உதிரம் கலந்த நினைவுகளில் நீ 
உள்ளே இருந்தே சீண்டுகின்றாய் 
உறக்கம் இன்றி புலம்புகின்றேன் 
உன்னையே தேடி விழிக்கின்றேன் 
உலகமே நீயென்று சுற்றியே வந்திடுவேன்...!



mercredi 11 novembre 2015

என்னுயிர் துளிகள்...!


இலகுவாய் நீ கண்ணீர் சிந்துகின்றாய்  
உயிரே ஒன்று தெரிந்துகொள்
நீ  சிந்தும் ஒவ்வொரு துளியும் 
உன் கண்ணீர்  துளிகள்ளல்ல 
அது என்னுயிர் துளிகள்...!

ஆதாமும் பொறாமை கொள்வான்...!


ஆதாமும் பொறாமை கொள்வான் அன்பே 
நான் உன்மேல் கொண்ட நேசம்கண்டு
யாரும் வைத்திராத அன்பு எனதே  
அம்பாய் உன்மேல் எய்திடவோ 
தாங்கி கொள்வாயோ என்றேக்கத்திலே 
பாதியே தருகிறேன் பாசத்திலே
திணறி போகும் என் காதலில் 
மூழ்கிட வருவாய் விரைவினில் 
விழி நோக்கும் இடமேதும் தெரிவதில்லை 
வின்பத்தில் உன்னுருவம் ஒன்றுதான் 
மனதிலே வேறு எண்ணம் ஏதுமில்லை 
உயிரே உன் நினைவோன்றுதான் 
நீ வெறுக்கும் நேரம் கூட 
என்னால் உன்னை நேசிக்க மட்டுமே 
முடிகின்றது....!


mercredi 9 septembre 2015

இதழோரம் புன்னகைத்தேன்...!


இமை மூடி பேசினேன் 
இதழ் மூடி பேசினேன் 
இஸ்டபடி பேசினேன் 
இடை விடாது பேசினேன் 
இறுதியிலே விழித்து பார்த்தேன் 
இது வெறும் கனவென்றறிந்து
இதழோரம் புன்னகைத்தேன்...

dimanche 6 septembre 2015

நீ மட்டும் ஒருவனே...!


வழியாத ஆண்மை 
கானல் நீர் திமிரு 
காந்த பார்வை 
அழகிய ரசனை 
மயக்கும் நடை 
ஈர்க்கும் பேச்சு 
இன்னும் எத்தனையோ 
உனக்கு மட்டும் 
பொருத்தமானவை 
உன்னை போல் 
எவனும் இல்லை 
இவ்வுலகிலே 
நீ மட்டும்
ஒருவனே...!

உனக்காகவே காத்திருக்கும்...


மனதிலே காதல் மெல்ல மெல்ல மலரும் 
உன் நினைவிலே என்  உள்ளம் குளிரும் 
உன்னை பார்க்கவே விழிகள் துடிக்கும் 
ஆசையாய் பேசிட வார்த்தைகள் தவிக்கும்
கவிதை கவிதையாய் ஊற்றெடுக்கும்
காகிதத்தில் குவிந்து கிடக்கும் 
உனக்காகவே காத்திருக்கும்...

mardi 1 septembre 2015

உன் ஒற்றை பார்வை...!


ஒர பார்வை 
உன் ஒற்றை பார்வை 
சிறு வினாடியில் 
அம்பாய் எய்து விட்டாய் 
பல நேரங்கள் கழிந்தும் 
நடுசாமம் ஆகிய பின்பும் 
ஏனோ எனது விழிகள்
மூட முடியாது துடிக்கின்றது  
துடிக்கும் துடிப்பிலும் 
புது இன்பம் கான்கிறது
என் மனம்...