vendredi 31 janvier 2014

கோடி நன்றிகள்...!

நாம் எதிர் பார்த்து காத்திருப்பது
எதிர் பாராத நேரங்களில் 
நிகழ்ந்திடும்போது
எத்தனை இன்பங்கள் 
மனதிலே துள்ளி குதிக்கின்றது
அதற்க்கு காரணமான
உள்ளங்களிட்கு 
கோடி நன்றிகள்...!

jeudi 30 janvier 2014

தயவு செய்து மன்னியுங்கள்...!


அறிந்தோ அறியாமலோ 
நாம் தவறு செய்து விடுகின்றோம் 
அதை எண்ணி மனம் வருந்தி
மன்னிப்பு கேட்டும் கிடைக்கவில்லை 
என்பதே மிக பெரிய தண்டனை 
முடிந்தால் மன்னியுங்கள்...

mardi 28 janvier 2014

எட்டி பார்கிறேன்....!


என் தாயின் அன்பை 
நீ தந்திடும் போது
இவ்வுலகையே 
மறந்து போகின்றேன் 
உன் கையில் நான் 
சேயாகும் போது 
சொர்க்கத்தையே
எட்டி பார்கிறேன்....

lundi 27 janvier 2014

திருட்டு...!


உன் விழிகளிட்க்கும் கூட 
கற்றுக்கொடுத்தாயோ
திருடிக்கொள்ள
யாருக்குமே தெரியாமலே 
திருடிவிட்டது 
எனது இதயத்தை...!

நல்ல நடிகன்...!


இவ்வுலகிலே 
நீ ஒருவனே 
நல்லவன் 
என்றெண்ணினேன் 
நீ ஒருவனே 
நல்ல நடிகன் 
என்பதை 
நிரூபித்துவிட்டாய் 
நீ...! 

dimanche 26 janvier 2014

ஏக்கத்தோடு நான்...!


உன் அன்பை தேடி ஓடுகிறேன் 
இருண்டு கிடக்கும் உன் மனதிலே 
நியத்தை தேடி அலைகிறேன் 
நீ பூட்டி வைத்த உன் இதயத்திலே 
விடிந்திடுமா என் வாழ்வும் 
ஏக்கத்தோடு நான்...!

எனக்குள்ளே நீ...!


உன்னருகில் நான் இல்லை 
உனக்குள்ளும் நான் இல்லை  
இருந்தும் நான் உன்னை 
நன்கு அறிவேன்   
எனக்குள்ளே நீ  இருப்பதால்...!

துடிக்கவே மறுக்கிறது...!


நீ நலம் வாழ்கின்றாய் 
என்றரிந்துதான் 
என்னிதயம் இதமாய் 
துடித்தது 
இன்று உன்நலம் அறியாது 
என்னிதயம் 
துடிக்கவே மறுக்கிறது...!

samedi 25 janvier 2014

நீயும் நானும் தொலைவில்...!


நீயும் நானும் தொலைவில் இருந்தாலும் 
எனக்குள்ளே எந்நேரமும் 
உன் நினைவுகளே ஓடுகின்றது 
இரத்த ஓடமாய்
பாலைவனத்தில் பூ பூக்கும் 
என காத்திருப்பது முட்டாள்த்தனம்
என்றறிந்தும் காத்திருக்கிறேன்...!

என் முதலும் முடிவும் நீயாக மட்டுமே வேண்டும்...!


என்னிதயத்தில் நான் வரைந்த 
முதல் ஓவியம் நீயல்லவா 
என்னுயிரிலே நான் எழுதிய 
முதல் காவியம் நீயல்லவா
இன்று மட்டுமல்ல என்றும் 
என் ஆசை ஒன்றுதான் 
என் முதலும் முடிவும் 
நீயாக மட்டுமே வேண்டும் 
என்னன்பே...!

mercredi 22 janvier 2014

சொர்க்கம் பூலோகம் வந்தது உன் உருவிலே...!


சொர்க்கம் பூலோகம் வந்தது 
உன் உருவிலே
என்னை உள்ளே பூட்டி வைத்தது 
தன் அன்பிலே 
அதனாலே பறந்து போனது 
என் சோகம் விண்ணிலே...!

mardi 21 janvier 2014

எனக்குள்ளே நீ உயர்ந்து கொண்டே செல்கின்றாய் ...!

                                                               ஒவ்வொருமுறையும் 
                                                                உன் குணத்தாலே 
                                                                  எனக்குள்ளே 
                                                             உயர்ந்து கொண்டே 
                                                               செல்கின்றாய் நீ...

நீ அதிஸ்ட சாலிதான்...


                                                                ஆயிரம் உறவுகள் 
                                                          கண்ணீரை பரிசளித்தாலும் 
                                                    ஒரேயொரு உறவு  உண்மையாக 
                                                  உன்கண்ணீரோடு கவலைகளையும் 
                                                         துடைத்திட இருந்தாலே 
                                                          நீ அதிஸ்ட சாலிதான்...

dimanche 19 janvier 2014

உன் புன்னகையாலே...!


                                                           உன் புன்னகையாலே 
                                                               என்னைச்சுட்டு 
                                                         உனது கன்னகுழியிலே
                                                           புதைத்துவிட்டாயெ 
                                                           இனி நான் எவ்வாறு 
                                                           நடமாடுவெனொ...!

எனது விழிகள்...!



பேசும் உனது விழிகளை
தேடுகிறது எனது விழிகள் 
ஒரே ஒரு முறை பார்த்திட்டால் 
போதுமே 
தூங்குமே எனது விழிகள்...!

என்னிதயம்...!


உயிருள்ளவரை 
உன்னை மட்டுமே 
சுமந்து வாழ 
ஆசைகொள்கிறது 
என்னிதயம் 
உன் சுவாசத்தில்
துடித்திடவே 
தவம் செய்கிறது 
என்னிதயம்...! 

jeudi 16 janvier 2014

உனது நினைவுகள்...!


உனது நினைவுகள் 
இன்றும் எனது கரம் 
கோர்த்திருப்பதால் தான்
அன்பே என்தேகத்தில்
உயிர் பிரியாது 
ஒட்டிக்கொண்டிருக்கின்ரது...!

என் காதலை பரிசளித்தேன்...!


என் காதலை பரிசளித்தேன் 
உனக்கென மட்டுமே 
அதை நீயே கொன்றுவிட்டு 
கண்ணீர் அஞ்சலி
செலுத்துகின்றாயே...!

கனவிலே மட்டும்...!



உன்னை நேசிப்பதால் 
கனவிலே மட்டும் 
சிரிக்கின்றேன் 
நீயென் கனவில்
மட்டுமே காதலனாய் 
அன்பினை தருவதால்...!

mercredi 15 janvier 2014

எவராலும் முடியவில்லை...!


எத்தனையோ ஆண்கள் 
வந்தும் 
எவராலும் முடியவில்லை 
உண்ணிடத்தை 
தொட்டிட
இப்போது மட்டுமல்ல 
எப்போதும் எவராலும் 
முடியாது...


mardi 14 janvier 2014

என் காதல்...!


கருவான என் காதல் 
இதய அறையிலே 
இதமாக வாழ்கிறது 
உனக்குள் என்றும் 
வாழ்கின்றேன் 
என்றறிந்ததால்...!

வெறும் வார்த்தைகளில் 
அறிய வைத்திட முடியாதேடா 
நம் காதலை இந்த உலகித்க்கு...!

நம் இதயங்கள் மட்டுமே அறியும் 
எனக்குள் உன்னை நான் சுமப்பதும் 
உனக்குள் நீ என்னை சுமப்பதும்...!

நாம் சேராவிட்டாலும்
நம் நினைவுகள் 
என்றுமே 
ஒன்றாகவே 
வழுமேடா...!


நான் இங்கே...!


கண்ணீரோடும்
கவி வரிகளோடும் 
உன்னை நினைத்தவண்ணம் 

நீயோ எங்கோ 
என்நிலமை அறியாது 
வாழ்கின்றாய்...!