vendredi 28 février 2014

நினைவிலும் கனவிலும் தொல்லை தருகின்றாய்...!



                                                    விலகி செல்கிறேன் என்று கூறி 
                                                            விலகி சென்றவன் நீ 
                                                    ஏனோ நினைவிலும் கனவிலும் 
                                                       தொல்லை தருகின்றாய் 
                                                             தினம் தினம்...!

jeudi 27 février 2014

உன் நினைவுகளையும் பூட்டிவிடேன்...!



உன்னை நேசித்த என்னிதயத்தை 
நீ பூட்டிவிடச்சொன்னாய்
நானும் பூட்டிவிடேன் 
உன் நினைவுகளையும் 
உள்ளே வைத்து...!

முடியவில்லை பேசிட...!


பேச துடிக்கும் என் இதயத்தையும் 
கட்டி போட்டுவிட்டான் என்னவன் 
கூறியது என்னுயிரானவன் 
என்பதனாலோ தெரியவில்லை 
முடியவில்லை பேசிட 

mercredi 26 février 2014

என் விழிகள் சிவந்தது...!


என் முகம் சிவந்தது 
அவன் முகம் பார்த்த நாளில் 
என் விழிகள் சிவந்தது 
அவன் விழி காணாத நாளில்...!

samedi 8 février 2014

மௌனிக்கின்றேன்...!


நீ என்னை விட்டு விலகும்போதே
என் வார்த்தைகளையும் கில்லிச்சென்றாயோ
நான் பேசுவதற்கும் வார்த்தைகளின்றி 
மௌனிக்கின்றேன்...!

ஏனோ மனம் கேட்பதில்லை...!


விடைபெறுகிறேன் என்று 
உதடுகள் கூறினாலும் 
ஏனோ மனம் கேட்பதில்லை 
தனக்கு பிடித்தவரை 
விட்டுச்செல்ல 
மறைந்திருந்தே 
நிழலாக தொடர்கிறது 
நித்தம் நித்தம் 
தொந்தரவின்றி...!

mercredi 5 février 2014

மனம் வருந்தி...!


நீ வணங்கும் 
இயற்க்கை தாயிடமே 
கேட்கின்றேன் 
உன்னை எனக்கு 
தந்திட சொல்லி 
மனம் வருந்தி...!

என்னுயிரையெ தருகிறேன்...!


என்னை தனிமையில் விட்டு 
நீ விலகி செல்வது 
தீயில் போட்டு எரிப்பது 
பேலே தான் அன்பே 
வலிக்கிறது 
முடிந்தால் மீண்டும் வந்துவிடு 
என்னுயிரையெ தருகிறேன்...!

lundi 3 février 2014

உனக்காக...!


நீ பேசிய வார்த்தைகளை 
ஆயிரம் முறை 
உச்சரிக்கின்றேன் 
நீ பேசாத நொடிகளில்...! 

இவ்வுலகில் 
எத்தனையோ
ஆண்கள் இருந்தும்
ஏனோ
உன்னை மட்டுமே
பிடிக்கின்றது
என்னிதயத்திட்க்கு...!

எத்தனையோ
கவி படித்தாலும்
என்னிதயம்
உன் பெயரினையே
ரசிக்கின்றது...!

உன்னை பார்த்தபின்தான்
எனக்குள்ளும் இதயம்
இருப்பதாய் உணர்கிறேன்...!

நீ பேசாத நொடியில்...!


நீ பேசாத நொடியில் 
கடிகாரத்தை 
ஆயிரம் முறை 
பார்த்திருப்பேன் 
அந்த நிமிடம்  
அப்படியே 
நின்றுவிட்டதோ 
என்ற எண்ணத்திலே...!