vendredi 31 juillet 2015

காத்திருகின்றேன்...!


தனிமையில் துவண்டு 
வாடி போகவில்லை 
தலைவனே 
உன்கரம் கோர்த்திட 
தவமே புரிகின்றேன் 
கனவுகள் சுமந்து 
கற்பனையிலே மிதக்கின்றேன் 
உன் வருகை ஒன்ரிட்கே
விழி மூடாமலே 
காத்திருகின்றேன்...


mercredi 29 juillet 2015

என்னுயிர் நட்பே கூறிடு...!


சோகம் வரும் போதெல்லாம் 
ஆறுதல் தேடி உன்னிடம் வந்தேன் 
மனதில் குழப்பமென 
அமைதி தேடி உன்னை நாடினேன் 
இதயத்தில் வலியென 
மருந்து  தேடி உன்னை அழைத்தேன் 
வாழ்வே கசப்பென
இனிமை தேடி உன்னிடம் பேசினேன் 
எப்போதும் அருகில் இருந்த நீ 
இன்று விலகிச்செல்வது ஏனோ 
என்னுயிர் நட்பே கூறிடு 
நீ அருகிலில்லை என்று அறிந்து 
அனைத்தும் என்னை சூழ்ந்தது இன்று 
தாங்கிட முடியவில்லை என்னால் 
மீண்டும் என்னிடம் வந்துவிடு
உன் நட்பாலே இன்பம் தந்துவிடு...!

நட்போ இன்று எதிர் திசை நோக்கி..!


உண்மையான நட்பு 
உரிமையான நட்பு 
புரிந்து கொண்ட நட்பு
பிரிந்திட கூடாத நட்பு 
நினைத்தபடி நான் 
நட்பை நெருங்கிட 
என் நட்போ இன்று 
நகர்ந்து செல்கின்றது 
எதிர் திசை நோக்கி..!

mardi 28 juillet 2015

ஐயா அப்துல் கலாம்...!


தமிழிற்க்கு ஓர் இழப்பு 
விஞ்ஞானத்திற்கே பேரிழப்பு 
ஐயா அப்துல் கலாம் 
இந்த மண்ணை விட்டு 
மறைந்து போனது 
உங்கள் நடமாற்றம் தான்
எப்போதும் அழியாது 
பொக்கிசமாய் இருக்கும் 
நீங்கள் படைத்த சரித்திரம்
உங்கள் அடையாளம் 
வாழும் தலைமுறைக்கும் 
வரபோகும் தலைமுறைக்கும்  
எடுத்துக்காடாய் நீங்கள் 
என்றும் இந்த பூமியிலே 
வாழ்வீர்கள்....


lundi 27 juillet 2015

மெதுவாய் நகர்கின்றேன்...!


விளையாட்டு சிறுமியாய்
குருபுகள் பல செய்து  
கழித்திட்ட காலங்கள் போக...
பெற்றவர்கள் வார்த்தையில்   
திருமண பேச்சொன்று
எனது காதினில் பாய...
குமரியாகிய எண்ணம் 
மனதில் தோன்ற...
நண்பர்களின் கேலிகள் 
உற்றாரின் கிண்டல்கள்
உறவுகளின் தேடல்கள்
புதிதாய் தோன்றிட... 
உதடினில் புன்னகை 
தானாக பூத்திட...
கற்பனை கனவுகள் 
உற்றாய் பாய்ந்திட...
என் மனமே பேசியது...
யாரவன்...?
உருவம் எதுவோ...? 
உணர்சிகள் எப்படியோ...? 
அதிகம் கோவம் உள்ளவனோ...?
அன்பை  பொலிபவனோ...?
சந்தேகம் உடையவனோ...?
சத்தியம் ஆனவனோ...?
அனைத்து வாழ்வானோ...? 
அடிமையாய் வாழ்வேனோ ...? 
ஆயிரம் கேள்விகள்
தேனிகளாய் சுற்ற...
அழகான ஒரு மாற்றம்...
அறியாத பயம்...
புரியாத குழப்பம்... 
அனைத்திற்கும் பதில்
தேடும் நான்...
காலத்தை நோக்கி
மெதுவாய் நகர்கின்றேன்...

நம்மை தேடி வரும் உறவுகள்...!

நம்மை தேடி வரும் உறவுகள்
நம்மை நேசிக்கின்றார்களா
என்று ஆராய்வதை விட 
நாம் அவர்களை 
உண்மையாக 
நேசித்தாலே போதும் 
நம் வாழ்வே 
சொர்க்கமாய் 
மாறும்...!

jeudi 23 juillet 2015

உனக்காக மட்டுமே...!

முரண்டு பிடிக்காமலே 
முற்றுகையிட்டு விட்டாய் 
நம் காதலிட்கு  
புரிந்துகொள் உயிரே 
என் மௌனத்தின்  காரணம் 
நான் உனக்கு ஏற்றவள்லில்லை 
என்று நீயென்னியதால் மட்டுமே 
என் தேகம் தீயில் வேகும் வரை 
உன்னை மட்டும்தான் சுமப்பேன் 
என் இதயத்தில் மட்டுமல்ல 
என் உயிரிலும் 
நீயென்னை புரிந்து கொண்டால் 
பிடித்திருந்தால் மீண்டும் வா 
காத்திருப்பேன் அன்றும் 
உனக்காக மட்டுமே...!

mercredi 22 juillet 2015

உன் நினைவுகள் அருகிருப்பதால்...!


தடுமாறும் மனதில் மாறாதிருக்கின்றது 
உனது நினைவுகள் ஒன்றுதான் 
உணவுகள் மறந்து விட்டேன் 
உறக்கமும் இழந்து விட்டேன் 
கனவுகள் மட்டும் நிறைகின்றது 
உன்னைச்சுமந்த நெஞ்சதினிலே 
கானல் நீர் போலே நீ 
காணும் விழியிலும் நீரே 
பாய்ந்தே ஓடுகின்றது 
பெருக்கெடுத்த வெள்ளம் போலே
உன்னை உயிராக நேசித்தேன் 
பதிலுக்கு இன்று நான் 
உலகத்தையே இழந்தேன்
மரணித்தால் மறந்திடுவேன் 
ஆகையால் நாடவில்லை 
அந்த மரணத்தையும் கூட 
நரகம் தான் நீ இல்லாத வாழ்வு 
இருந்தாலும் சுகம் தான் 
உன் நினைவுகள் அருகிருப்பதால்...! 

dimanche 12 juillet 2015

எரிகிறது இதயம் தன்னிலே...!


சில நாட்கள் சொர்க்கம் 
என்னவன் அருகிலே 
பூமியே நரகம் 
அவன் பிரிவிலே  
மீண்டும் வருவான் 
பேராசை எனக்குள்ளே 
கனவு நான் கண்டேன் 
கலைத்தானே நிஜத்திலே 
என்னை மறந்தே போனான்
வெகு விரைவிலே 
அவன் பாதியாய் ஒருபெண்
சேரத்தானே தன்னுயிரிலே 
கண்டதும் அதிர்ந்தேன் 
சொட்டியது நீர் விழியிலே 
கற்பனை உள்ளம் 
கருகியதே இன்னாளே 
மறந்திட நினைத்தேன் 
எரிகிறது இதயம் தன்னிலே...!

vendredi 3 juillet 2015

மாறிப்போகும் மானிடம்...!




அறியாதா பெண்மை 
கனவுகள் பல கண்டு 
கற்ப்பனையில் மிதப்பவள்
பெற்றவர் பார்ப்பவனை 
மறு பேச்சின்றி மணம் கொண்டு 
புது வாழ்வு தொடங்கிட 
கடக்கும் சில ஆண்டு சிரித்து பழகிவிட்டு 
சில்லறை மனிதனாய் மாறிடும் போதே 
மனம் உடைந்து போகின்றாள் 
யாரிடம் சொல்லியழுதிட
பெற்றவர்கள் மனம் உடைந்து 
என்ன ஆவார்கள் 
மற்றவர்கள் பேசும் வார்த்தைகள் 
மீண்டும் மீண்டும் கூறு போடும் 
இவள் மனதையே 
காசு பணம் கேட்டாளா 
இல்லை அன்பை தானே கேட்டாள்
சொத்து சுகம் கேட்டாளா
இல்லை அரவணைப்பை தானே கேட்டாள்
அவள் மனம் புரிந்து கொள்ள முடியாத நீ 
மணம் கொண்டது எதற்கு 
பிள்ளைகள் பெற்றது எதற்கு 
உன் இஸ்டம் போல்
நீ தனிமையிலே 
வாழ்ந்து விட்டு போயிருக்கலாமே
பாவம் அறியாத பெண்மை 
என்ன செய்தாள் 
அவள் வாழ்வை புதிராக்கிவிட்டாயே 
கசங்கிய விழியோடு 
கண்ணீரால் அவள் வரைந்தாள்...!