samedi 14 novembre 2015

உலகமே நீயென்று சுற்றியே வந்திடுவேன்...!


காற்றிலே ஒருசேதி அனுப்பி வைத்தேனே 
உயிரே உன்னிடம் வந்து சேர்ந்ததோ 
உறவாய் வந்தவனே  உணர்ந்தாயோ 
உதிரம் கலந்த நினைவுகளில் நீ 
உள்ளே இருந்தே சீண்டுகின்றாய் 
உறக்கம் இன்றி புலம்புகின்றேன் 
உன்னையே தேடி விழிக்கின்றேன் 
உலகமே நீயென்று சுற்றியே வந்திடுவேன்...!



mercredi 11 novembre 2015

என்னுயிர் துளிகள்...!


இலகுவாய் நீ கண்ணீர் சிந்துகின்றாய்  
உயிரே ஒன்று தெரிந்துகொள்
நீ  சிந்தும் ஒவ்வொரு துளியும் 
உன் கண்ணீர்  துளிகள்ளல்ல 
அது என்னுயிர் துளிகள்...!

ஆதாமும் பொறாமை கொள்வான்...!


ஆதாமும் பொறாமை கொள்வான் அன்பே 
நான் உன்மேல் கொண்ட நேசம்கண்டு
யாரும் வைத்திராத அன்பு எனதே  
அம்பாய் உன்மேல் எய்திடவோ 
தாங்கி கொள்வாயோ என்றேக்கத்திலே 
பாதியே தருகிறேன் பாசத்திலே
திணறி போகும் என் காதலில் 
மூழ்கிட வருவாய் விரைவினில் 
விழி நோக்கும் இடமேதும் தெரிவதில்லை 
வின்பத்தில் உன்னுருவம் ஒன்றுதான் 
மனதிலே வேறு எண்ணம் ஏதுமில்லை 
உயிரே உன் நினைவோன்றுதான் 
நீ வெறுக்கும் நேரம் கூட 
என்னால் உன்னை நேசிக்க மட்டுமே 
முடிகின்றது....!