samedi 14 novembre 2015
mercredi 11 novembre 2015
ஆதாமும் பொறாமை கொள்வான்...!
ஆதாமும் பொறாமை கொள்வான் அன்பே
நான் உன்மேல் கொண்ட நேசம்கண்டு
யாரும் வைத்திராத அன்பு எனதே
அம்பாய் உன்மேல் எய்திடவோ
தாங்கி கொள்வாயோ என்றேக்கத்திலே
பாதியே தருகிறேன் பாசத்திலே
திணறி போகும் என் காதலில்
மூழ்கிட வருவாய் விரைவினில்
விழி நோக்கும் இடமேதும் தெரிவதில்லை
வின்பத்தில் உன்னுருவம் ஒன்றுதான்
மனதிலே வேறு எண்ணம் ஏதுமில்லை
உயிரே உன் நினைவோன்றுதான்
நீ வெறுக்கும் நேரம் கூட
என்னால் உன்னை நேசிக்க மட்டுமே
முடிகின்றது....!
Inscription à :
Articles (Atom)