samedi 14 novembre 2015
mercredi 11 novembre 2015
ஆதாமும் பொறாமை கொள்வான்...!
ஆதாமும் பொறாமை கொள்வான் அன்பே
நான் உன்மேல் கொண்ட நேசம்கண்டு
யாரும் வைத்திராத அன்பு எனதே
அம்பாய் உன்மேல் எய்திடவோ
தாங்கி கொள்வாயோ என்றேக்கத்திலே
பாதியே தருகிறேன் பாசத்திலே
திணறி போகும் என் காதலில்
மூழ்கிட வருவாய் விரைவினில்
விழி நோக்கும் இடமேதும் தெரிவதில்லை
வின்பத்தில் உன்னுருவம் ஒன்றுதான்
மனதிலே வேறு எண்ணம் ஏதுமில்லை
உயிரே உன் நினைவோன்றுதான்
நீ வெறுக்கும் நேரம் கூட
என்னால் உன்னை நேசிக்க மட்டுமே
முடிகின்றது....!
mercredi 9 septembre 2015
dimanche 6 septembre 2015
mardi 1 septembre 2015
samedi 29 août 2015
நலம் வாழ வாழ்த்துகின்றோம்...!
கனவுகள் சுமந்து வந்த
மாங்கல்யநாள் இன்று
இருவர் இணைந்து
உறவுகள் பெருகிய நாளின்று
மனமெங்கும் இன்பங்கள் பொங்கி
இதயத்தினில் ஊற்றெடுத்து
உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்தும்
வாழ்த்துகள் குவித்திட
பாலும்,பழமும்
தேனின் சுவையும் போலே
இருவரின் இல்லறவாழ்வும்
இனித்திட வாழ்கவே...
உணர்வுகளை மதித்து
உயிறேன நினைத்து
விட்டு கொடுத்து
உறவுகள் போற்றிட
வாழ்கவே...
ஆலமரம் போலவே
வேரூண்டி விழுதுகள் விட்டு
வம்சம் விருட்சம் பெற்று
வாழ்கவே...
என்றென்றும் பல்லாண்டு காலம்
நலமுடனும் நற்க்குனமுடனும்
நலம் வாழ வாழ்த்துகின்றோம்...!
lundi 10 août 2015
vendredi 7 août 2015
vendredi 31 juillet 2015
mercredi 29 juillet 2015
என்னுயிர் நட்பே கூறிடு...!
சோகம் வரும் போதெல்லாம்
ஆறுதல் தேடி உன்னிடம் வந்தேன்
மனதில் குழப்பமென
அமைதி தேடி உன்னை நாடினேன்
இதயத்தில் வலியென
மருந்து தேடி உன்னை அழைத்தேன்
வாழ்வே கசப்பென
இனிமை தேடி உன்னிடம் பேசினேன்
எப்போதும் அருகில் இருந்த நீ
இன்று விலகிச்செல்வது ஏனோ
என்னுயிர் நட்பே கூறிடு
நீ அருகிலில்லை என்று அறிந்து
அனைத்தும் என்னை சூழ்ந்தது இன்று
தாங்கிட முடியவில்லை என்னால்
மீண்டும் என்னிடம் வந்துவிடு
உன் நட்பாலே இன்பம் தந்துவிடு...!
mardi 28 juillet 2015
ஐயா அப்துல் கலாம்...!
தமிழிற்க்கு ஓர் இழப்பு
விஞ்ஞானத்திற்கே பேரிழப்பு
ஐயா அப்துல் கலாம்
இந்த மண்ணை விட்டு
மறைந்து போனது
உங்கள் நடமாற்றம் தான்
எப்போதும் அழியாது
பொக்கிசமாய் இருக்கும்
நீங்கள் படைத்த சரித்திரம்
உங்கள் அடையாளம்
வாழும் தலைமுறைக்கும்
வரபோகும் தலைமுறைக்கும்
எடுத்துக்காடாய் நீங்கள்
என்றும் இந்த பூமியிலே
வாழ்வீர்கள்....
lundi 27 juillet 2015
மெதுவாய் நகர்கின்றேன்...!
விளையாட்டு சிறுமியாய்
குருபுகள் பல செய்து
கழித்திட்ட காலங்கள் போக...
பெற்றவர்கள் வார்த்தையில்
திருமண பேச்சொன்று
எனது காதினில் பாய...
குமரியாகிய எண்ணம்
மனதில் தோன்ற...
நண்பர்களின் கேலிகள்
உற்றாரின் கிண்டல்கள்
உறவுகளின் தேடல்கள்
புதிதாய் தோன்றிட...
உதடினில் புன்னகை
தானாக பூத்திட...
கற்பனை கனவுகள்
உற்றாய் பாய்ந்திட...
என் மனமே பேசியது...
யாரவன்...?
உருவம் எதுவோ...?
உணர்சிகள் எப்படியோ...?
அதிகம் கோவம் உள்ளவனோ...?
அன்பை பொலிபவனோ...?
சந்தேகம் உடையவனோ...?
சத்தியம் ஆனவனோ...?
அனைத்து வாழ்வானோ...?
அடிமையாய் வாழ்வேனோ ...?
ஆயிரம் கேள்விகள்
தேனிகளாய் சுற்ற...
அழகான ஒரு மாற்றம்...
அறியாத பயம்...
புரியாத குழப்பம்...
அனைத்திற்கும் பதில்
தேடும் நான்...
காலத்தை நோக்கி
மெதுவாய் நகர்கின்றேன்...
jeudi 23 juillet 2015
உனக்காக மட்டுமே...!
முரண்டு பிடிக்காமலே
முற்றுகையிட்டு விட்டாய்
நம் காதலிட்கு
புரிந்துகொள் உயிரே
என் மௌனத்தின் காரணம்
நான் உனக்கு ஏற்றவள்லில்லை
என்று நீயென்னியதால் மட்டுமே
என் தேகம் தீயில் வேகும் வரை
உன்னை மட்டும்தான் சுமப்பேன்
என் இதயத்தில் மட்டுமல்ல
என் உயிரிலும்
நீயென்னை புரிந்து கொண்டால்
பிடித்திருந்தால் மீண்டும் வா
காத்திருப்பேன் அன்றும்
உனக்காக மட்டுமே...!
mercredi 22 juillet 2015
உன் நினைவுகள் அருகிருப்பதால்...!
தடுமாறும் மனதில் மாறாதிருக்கின்றது
உனது நினைவுகள் ஒன்றுதான்
உணவுகள் மறந்து விட்டேன்
உறக்கமும் இழந்து விட்டேன்
கனவுகள் மட்டும் நிறைகின்றது
உன்னைச்சுமந்த நெஞ்சதினிலே
கானல் நீர் போலே நீ
காணும் விழியிலும் நீரே
பாய்ந்தே ஓடுகின்றது
பெருக்கெடுத்த வெள்ளம் போலே
உன்னை உயிராக நேசித்தேன்
பதிலுக்கு இன்று நான்
உலகத்தையே இழந்தேன்
மரணித்தால் மறந்திடுவேன்
ஆகையால் நாடவில்லை
அந்த மரணத்தையும் கூட
நரகம் தான் நீ இல்லாத வாழ்வு
இருந்தாலும் சுகம் தான்
உன் நினைவுகள் அருகிருப்பதால்...!
dimanche 12 juillet 2015
எரிகிறது இதயம் தன்னிலே...!
சில நாட்கள் சொர்க்கம்
என்னவன் அருகிலே
பூமியே நரகம்
அவன் பிரிவிலே
மீண்டும் வருவான்
பேராசை எனக்குள்ளே
கனவு நான் கண்டேன்
கலைத்தானே நிஜத்திலே
என்னை மறந்தே போனான்
வெகு விரைவிலே
அவன் பாதியாய் ஒருபெண்
சேரத்தானே தன்னுயிரிலே
கண்டதும் அதிர்ந்தேன்
சொட்டியது நீர் விழியிலே
கற்பனை உள்ளம்
கருகியதே இன்னாளே
மறந்திட நினைத்தேன்
எரிகிறது இதயம் தன்னிலே...!
vendredi 3 juillet 2015
மாறிப்போகும் மானிடம்...!
அறியாதா பெண்மை
கனவுகள் பல கண்டு
கற்ப்பனையில் மிதப்பவள்
பெற்றவர் பார்ப்பவனை
மறு பேச்சின்றி மணம் கொண்டு
புது வாழ்வு தொடங்கிட
கடக்கும் சில ஆண்டு சிரித்து பழகிவிட்டு
சில்லறை மனிதனாய் மாறிடும் போதே
மனம் உடைந்து போகின்றாள்
யாரிடம் சொல்லியழுதிட
பெற்றவர்கள் மனம் உடைந்து
என்ன ஆவார்கள்
மற்றவர்கள் பேசும் வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் கூறு போடும்
இவள் மனதையே
காசு பணம் கேட்டாளா
இல்லை அன்பை தானே கேட்டாள்
சொத்து சுகம் கேட்டாளா
இல்லை அரவணைப்பை தானே கேட்டாள்
அவள் மனம் புரிந்து கொள்ள முடியாத நீ
மணம் கொண்டது எதற்கு
பிள்ளைகள் பெற்றது எதற்கு
உன் இஸ்டம் போல்
நீ தனிமையிலே
வாழ்ந்து விட்டு போயிருக்கலாமே
பாவம் அறியாத பெண்மை
என்ன செய்தாள்
அவள் வாழ்வை புதிராக்கிவிட்டாயே
கசங்கிய விழியோடு
கண்ணீரால் அவள் வரைந்தாள்...!
vendredi 10 avril 2015
jeudi 9 avril 2015
mercredi 8 avril 2015
இறந்து போன இதயம்...!
கற்ப்பனைகளும் ஆயிரம்தான்
கனவுகளும் அதிகம் தான்
கண்டவுடன் ஆச்சரியம் தான்
எனக்கு...
உன்னை கண்டவுடன்
ஆச்சரியம் தான்
எனக்கு...
கற்ப்பனைகளும் கனவுகளும்
நிஜமாகவே
நிறைவேறிடும் போது
நடப்பதை எண்ணியே
மனதெங்கும் ஆச்சரியம் தான்...
என் மனப்புத்தகம்
படித்துவிட்டுத்தானோ
உன்னை அனுப்பி வைத்தான்
இறைவன்
சந்தேகம் தான் உள்ளுக்குள்ளே…
அட ஆசைப்பட்டதெல்லாம்
ஒவ்வொன்றாய் நிகழ்ந்திட
சில சஞ்சடங்கள்,தடங்கல்கள்
திஷ்ற்றி போலே வந்திட...
மனம் வருந்தும் நேரம்கூட
உன் அன்பாலே மாற்றிடுவாய்
சோகத்தையும் அழித்து
இன்பத்தை தந்திடுவாய்...
அதிஸ்டம் இல்லாதவள்
என்றெண்ணிய எனை
உலகத்தை வென்றதை போல்
மகிழ வைத்தாய் நீ ...
போராடங்கள் வந்தாலும்
மரணமே வந்தாலும்
உன்னை விட்டுச்செல்ல மாட்டேன்
வாக்குகள் பலம் தான்...
நம்பிக்கை வேறூண்டி
விழுதுகள் விட்ட பின்னர்
யார் முயன்ற போதும்
அழித்திட முடியவில்லை
எவராலும்...
உன் மேல் நான் கொண்ட
நம்பிக்கையை...
வாழ போகும் காலமென்ன
இனி எடுக்கப்போகும் ஜென்மமும்
உனக்காகத்தான்
உறுதியாக நான்...
காலம் கனியவில்லை
நேரம் நகரவில்லை
யாரும் மசியவில்லை
இவளோ உனக்கு அதிஷ்டமில்லை...
ஒருபோதும் அழியாது என்னன்பு
எனக் கூறிவிட்டு
உனக்குள் அன்பை சுமந்து
நீயெனை விட்டுச்சென்றால்
மறந்திடுவேன் என்று எண்ணி விட்டாயோ...
காலம் ஓடுகின்றது
நேரம் மாறுகின்றது
நாட்களும் மறைகிறது
உனது நினைவுகளோ மாறது
என்னை கொள்கின்றது
இறந்து விட்ட இதயத்தில்
இடமெங்கே குடுப்பேன்
இன்னோர் உறவுக்கு
நிச்சயம் முடியாது...
Inscription à :
Articles (Atom)