lundi 17 mars 2014

காதல் வானிலே...!


அன்பே...
ஐம்புலன்களை சாட்ச்சியாக வைத்து
நாம் கோர்த்த கரங்கள் பிரியாது பறந்து திரிவோம் வெண்புறாக்களாய் காதல் வானிலே...!

mercredi 5 mars 2014

என் அம்புலியே...!



எட்டி பிடிக்கும் அருகில் இல்லை 
தொட்டு விட முடியவும் இல்லை 
கண்ணில் தென்பட்ட நீ 
மனதை மட்டும் திருடி விட்டாய் 
தினம் நான் ரசிக்கும் 
என் அம்புலியே...!

கொடிய விஷம்...!


சொட்டு சொட்டாய் 
என்னை கொள்ளும்
உன் நினைவுகளும் 
கொடிய விஷம் தான் 
என்பதை நீயும் அறிவாயா...?

உன் நினைவுகள்...!


வீசும் காற்றில் கூட 
தேன் துளிச்சாரல்கள்
உன் நினைவுகள் 
மனதினை நனைக்கும் 
பொழுதினில்...!

mardi 4 mars 2014

உலகில் கெட்டவள் நானானேன்...!


சொல்ல முடியாத சோகங்கள் 
ஆயிரம் எனக்குள்ளே 
வலிகள் தாங்காது எனது விழிகளில்
பொங்கி வரும் கண்ணீர் கண்டு 
துடைத்திட கை ஒன்றும் நீளவில்லை 
முட்டை கண்ணீறேன்று கூறிட 
பல வாய்கள் மட்டும் நீண்டது 
வேஷம் போடும் உலகம் வேண்டாம் என்று 
விட்டு சென்றிடவும் முடியாத கோழை நான்  
அதனால் தான் என்னவோ 
எனது வாயும் கூட நீண்டு போகிறது 
சில நேரங்களில் 
அதனாலே உலகில் கெட்டவள் நானானேன்...!

வாழ்க்கை பாதை முழுதும் முட்கள்...!


                                                                 என் வாழ்க்கை
                                                                 பாதை முழுதும் 
                                                             முட்க்களை போட்டு
                                                                 மரணத்தையும் 
                                                           தொலைவில் வைத்து 
                                                           அனுப்பி வைக்கிறான் 
                                                                  இறைவன்...!

lundi 3 mars 2014

அணைவருமே வெறுக்கின்றனர்...!


என்ன பாவம் 
செய்தேனோ 
இறைவா...?
உன்னில் இருந்து  
இஜமன் வரை 
அணைவருமே 
வெறுக்கின்றனர்...!

dimanche 2 mars 2014

உணர்வற்ற ஜடமாய் நான் ஆனேன்...!




உறவுகளே உயர்ந்ததென்று 
உணர்வுகளையே தீயிட்டவள்  
உறவுகளின் வேஷம் கலைய
உணர்வற்ற ஜடமாய் 
நான் ஆனேன்...!

என்னை கருவறை அனுப்பி வைத்தாய்...!


இவ்வுகளில் 
ஏமாற்றத்தை மட்டுமே 
பெற்றிடு என்றா 
என்னை கருவறை 
அனுப்பி வைத்தாய் 
இறைவா...?