mercredi 9 septembre 2015

இதழோரம் புன்னகைத்தேன்...!


இமை மூடி பேசினேன் 
இதழ் மூடி பேசினேன் 
இஸ்டபடி பேசினேன் 
இடை விடாது பேசினேன் 
இறுதியிலே விழித்து பார்த்தேன் 
இது வெறும் கனவென்றறிந்து
இதழோரம் புன்னகைத்தேன்...

dimanche 6 septembre 2015

நீ மட்டும் ஒருவனே...!


வழியாத ஆண்மை 
கானல் நீர் திமிரு 
காந்த பார்வை 
அழகிய ரசனை 
மயக்கும் நடை 
ஈர்க்கும் பேச்சு 
இன்னும் எத்தனையோ 
உனக்கு மட்டும் 
பொருத்தமானவை 
உன்னை போல் 
எவனும் இல்லை 
இவ்வுலகிலே 
நீ மட்டும்
ஒருவனே...!

உனக்காகவே காத்திருக்கும்...


மனதிலே காதல் மெல்ல மெல்ல மலரும் 
உன் நினைவிலே என்  உள்ளம் குளிரும் 
உன்னை பார்க்கவே விழிகள் துடிக்கும் 
ஆசையாய் பேசிட வார்த்தைகள் தவிக்கும்
கவிதை கவிதையாய் ஊற்றெடுக்கும்
காகிதத்தில் குவிந்து கிடக்கும் 
உனக்காகவே காத்திருக்கும்...

mardi 1 septembre 2015

உன் ஒற்றை பார்வை...!


ஒர பார்வை 
உன் ஒற்றை பார்வை 
சிறு வினாடியில் 
அம்பாய் எய்து விட்டாய் 
பல நேரங்கள் கழிந்தும் 
நடுசாமம் ஆகிய பின்பும் 
ஏனோ எனது விழிகள்
மூட முடியாது துடிக்கின்றது  
துடிக்கும் துடிப்பிலும் 
புது இன்பம் கான்கிறது
என் மனம்...