samedi 29 août 2015

நலம் வாழ வாழ்த்துகின்றோம்...!


கனவுகள் சுமந்து வந்த 
மாங்கல்யநாள் இன்று 
இருவர் இணைந்து 
உறவுகள் பெருகிய நாளின்று 
மனமெங்கும் இன்பங்கள் பொங்கி
இதயத்தினில் ஊற்றெடுத்து 
உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்தும் 
வாழ்த்துகள் குவித்திட 
பாலும்,பழமும் 
தேனின் சுவையும் போலே 
இருவரின் இல்லறவாழ்வும் 
இனித்திட வாழ்கவே...
உணர்வுகளை மதித்து 
உயிறேன நினைத்து
விட்டு கொடுத்து 
உறவுகள் போற்றிட 
வாழ்கவே...
ஆலமரம் போலவே 
வேரூண்டி விழுதுகள் விட்டு 
வம்சம் விருட்சம் பெற்று 
வாழ்கவே...
என்றென்றும் பல்லாண்டு காலம் 
நலமுடனும் நற்க்குனமுடனும்
நலம் வாழ வாழ்த்துகின்றோம்...!

lundi 10 août 2015

இந்த ஜென்மம் முழுதும்...!

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் 
வழமை ஆகிவிட்டது என் வாழ்வில் 
பலமுறை ஏமாந்த பின்பும்  
தெளியவில்லை என் மனம் 
எதையும் விருப்பிட கூடாதென 
அற்ப்பமனம் ஆசை படுவதையும் 
ஏமாந்து போவதையுமே 
வரமாய் பெற்றுவிட்டது போல் 
இந்த ஜென்மம் முழுதும்...!

vendredi 7 août 2015

ஏதோ ஓர் மாற்றம்...!


ஏதோ ஓர் மாற்றம் 
அறியாத மன தோற்றம்
புதிதாய் ஒரு அச்சம் 
உள்ளே புயல் வீசும் 
தென்றலோடு மலர் வாசம் 
உணர்வுகளோ கவி பேசும் 
உதடு தானாய் சிரிக்கும் 
இதயத்திலே ஒளி தெறிக்கும் 
கனவுகள் கண்ணிலே குவியும் 
கற்பனையில் உள்ளமே மிதக்கும்...!