mercredi 5 novembre 2014

அழியாது உனது நினைவுகள்...!


நீ சுவாசிக்கும் மூச்சு எவரானாலும் 
என்னிதயமே நான் வாழ காரணம் நீயே 
தனிமையில்த்தான் தவிக்கின்றேன் 
காரணம் உன் நினைவுகளின் திறமை 
தினம் கண்ணீரே வடிக்கின்றேன்
உயிரே அருகில் நீயில்லா வறுமை 
என்தேகம் மண்ணில் புதைந்தே போனாலும் 
அழியாது உனது நினைவுகள்...!

உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா...!


உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா
என்னை விட்டு ஏன் சென்றாய் என்று 
எங்கே சென்றாய் என்று 
எதற்காக சென்றாய் என்று 
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா
என்னுயிரே திரும்பி வந்துவிடு என்று 
என்னோடு வந்துவிடு என்று 
எனக்காகவே வந்துவிடு என்று 
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா 
என்சோகங்கள் கரைந்துவிடட்டும் என்று 
என்பாவங்கள் அழிந்துவிடட்டும் என்று 
என் சாபங்கள் நீங்கிவிடட்டும் என்று 
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா...!