lundi 27 octobre 2014

மரணித்துவிட்டேன்...!


மரணம் வரை மறவேன் என்று நேசித்த நீ 
மரணித்துவிட்டேன் என்று எண்ணியா 
மறந்தாய் என்னை 
மறந்துவிட்டாய் என்று என்னும்போதுதான் 
மரணம் என்னை அழைக்கின்றது அருகில்...!

mercredi 22 octobre 2014

உன் இதயம்...!



கல்லாக இருக்கும் உன்னிதயத்தை 
அன்பெனும் கயிற்றால் கட்டி 
இழுத்து பார்க்கின்றேன் 
சற்றும் நகராமல் இருக்கின்றது 
உன் இதயம்...!

dimanche 19 octobre 2014

உயிரே என்வலி அறியாயோ நீ...?


எவனோ என்று நினைத்தேன் 
விலகியே நடந்தேன் 
விலகாமல் நீ வந்ததனாலோ
என்னவென்றே அறியேன் 
இதயம் நோருகியத்தை உணர்ந்தேன் 
நீ விலகி செல்வதனாலோ
உயிரே என் வலி அறியாயோ நீ...?

jeudi 16 octobre 2014

நீ தூரம் சென்றதால்...!


என்னை விட்டு விலகி நீ
உன்நினைவுகளை சுமந்து நான்
உன்னை பிடித்ததால் தானோ என்னவோ
என் வாழ்வில் வேறதும் பிடிக்கவில்லை
நீ தூரம் சென்றதால்...!
 

உன்னை மறந்துவிட்டேன் தான்...!


உதடுகள் பொய் சொல்ல கூடும்  
ஆனாலும் என் விழியோரம் 
வழியும் நீர் கூறும் 
என்றும் உன்னையே  தான்
நேசிகின்றேன் என்று...!

mercredi 15 octobre 2014

கன்னத்தில் விழுந்த மழைத்துளி...!



நிலா வெளிச்சத்தில் 
பொழியும் மழை நடுவினிலே 
ஒற்றை குடைக்குள்ளே 
என்னை அணைத்தபடி நீ 
குடையையும் தாண்டி 
கன்னத்தில் விழுந்த மழைத்துளி
துடைத்துக்கொண்டே கண் விழித்தேன்
பின்பு தான் நான் அறிந்தேன்
அது என் கண்ணீரென்று...!

lundi 13 octobre 2014

மிகிழ்ச்சியெடா எனக்கு...!


மீண்டும் நீ என்னோடு பேசியது 
சாதாரணம் ஆகலாம் உனக்கு 
ஏனோ உலகசாதனை படைத்துவிட்ட
மிகிழ்ச்சியெடா எனக்கு...!

dimanche 12 octobre 2014

உதவியில்லை உலகுண்டு...!


பணமில்லை பசியுண்டு 
அறிவில்லை அன்புண்டு 
உறவில்லை உயிருண்டு 
துணிவில்லை துயருண்டு 
உதவியில்லை உலகுண்டு...!


samedi 11 octobre 2014

உன் பிரிவால்...!


வசந்த காலத்து 
வண்ணத்து பூச்சிபோல் 
வலம் வந்த என் காதல் 
இன்று தீயில் உருகும் மெழுகாய் 
உருகியே போகின்றது 
உன் பிரிவால்...!


நம் வாழ்க்கையில்...!


நாம் நேசிக்கும் உறவுகள் 
கண் கலங்கிட கூடாதென்று
எண்ணியே வாழும்பொழுது 
அவர்கள் நம் கண்களில் 
இரத்தம் வடிய வைக்கின்றனர் 
அதுதான் பெரிய வலியாகின்றது
நம் வாழ்க்கையில்...!

jeudi 9 octobre 2014

அவன் குழந்தை பேச்சை கெஞ்சி கேட்டு கேட்க்க தோணும்...!


கொஞ்சி பேசும் அவன் குழந்தை பேச்சை 
கெஞ்சி கேட்டு கேட்க்க தோணும் 
வஞ்சம் இல்லா அவன் மனசில் 
தஞ்சம் கேட்டு வாழ தோணும் 
அச்சம் இல்லா அவன் உயிரில் 
மிச்சம் இல்லா கலந்திட வேணும்...!

காதல் எனக்கு நான் சுவாசிக்கும் மூச்சேடா...!


காதல் உனக்கு விளையாட்டாகலாம்
காலம் சென்றதும் மாற்றி விட்டு போக 
காதல் எனக்கு நான் சுவாசிக்கும் மூச்சேடா 
காலம் முழுதும் என்னோடு தானிருக்கும்...!